விலைரூ.25
முகப்பு » மாணவருக்காக » இந்த முறை நீதான்
புத்தகங்கள்
Rating
விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை - 1.(பக்கங்கள்: 64)
மாணவ, மாணவியரே! நீங்கள் எதிர்கொள்ளும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை அலட்சியப்படுத்தாதீர்கள். வாழ்க்கையில் ஒரே ஒருமுறை எழுதப்போகும் இத்தேர்வுகளால் அதிகபட்ச மதிப்பெண்கள் பெறுவது உங்கள் குறிக்கோள் மட்டுமல்ல... அத்தியாவசியமும் கூட! உடலில் பச்சை குத்திக் கொள்வது போலவே இந்த மதிப்பெண்களும் நிரந்தரமானது. உங்களது தலையெழுத்தை நிர்ணயிப்பதாகும். விருப்பதற்கு கேற்றதோர் உயர் கல்வி, கணிசமாகப் பொருளீட்டும் வேலை வாய்ப்பு, சமூகத்தில் கவுரவம், மதிப்பு, மரியாதை இவையனைத்திற்கும் அச்சாரம் இதே மதிப்பெண்கள் தான், நினைவிருக்கட்டும். இத்தகைய எச்சரிக்கையுடன் மாணவ, மாணவியர் தேர்வு சமயங்களில் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகளையும் உள்ளடக்கியது இச்சிறுநூல். மேலும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தொழில்துறை சாதனையாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை குறிப்புகளைச் சுருக்கமாக முன்வைத்து மாணவர்களிடையே நேரடியாக உரையாடுவதைப் போன்ற எளிய சரளமான நடையாகவும் "தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் ஒரு சாதனையாளரது சொற்பொழிவுக்கு நிகராகவும் அமைந்துள்ளது இந்நூல்!
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!