‘அவுரங்க’ என்ற சொல்லுக்கு – ‘அரசு சிம்மாசனம்’ என்றும், ‘ஜேப்’ என்ற சொல்லுக்கு ‘அழகு’ என்றும் பொருள். இந்த இரு பாரசீகச் சொற்களுக்கும், ‘அழகிய அரசு சிம்மாசனம்’ என்று பொருள்.
தெற்கே தரங்கம்பாடி, நாகப்பட்டினம் தொடங்கி, வடக்கே காஷ்மீர், கிழக்கே வங்காளம், மேற்கே ஆப்கானிஸ்தான் என, விரிந்த பேரரசை ஆட்சி செய்தவர் மாமன்னர் அவுரங்கஜேப். ‘அவுரங்கசீப்’ – என்று சொல்லக்கூடாது. ‘அவரங்கஜேப்’ என்று தான் சொல்ல வேண்டும் என்கிறார் ஆசிரியர். மன்னரின் பல நல்லியல்புகளை இந்த நூல் விவரிக்கிறது. படித்துப் பாருங்கள்!
எஸ்.குரு