அமெரிக்காவில், ஜான் கென்னடி கொலை செய்யப்பட்டது – ஒரு மாபெரும் சோக நிகழ்ச்சி. ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டதில் இருந்து, கொலை வழக்கு விசாரணை முடியும் வரை, நடந்த விவகாரங்கள் என்ன என்பதை விவரமாக சொல்கிறது இந்தப் புத்தகம். உலகமே வியந்து போற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளின் உயிர்களுக்கு, எந்தெந்த நேரத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது என்பதைப் பற்றி எல்லாம், இதில் நூலாசிரியர் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கொலை வழக்கு பற்றிய யூகங்களும், விவாதங்களும் கி.பி.2000த்திலும் தொடரும் என்று, ஆஸ்வால்டு சுட்ட அன்றே, ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை ஆசிரியர், தீர்க்க தரிசனம் சொன்னது இன்று நிஜமாகிவிட்டது என்றும் ஆசிரியர் நிறுவுகிறார். ஒரு துப்பறியும் கதை போல சொல்லும் கட்டுரைகள் தொகுப்பு! மனம் கனத்துப் போகிறது.
எஸ்.குரு