நாகிரெட்டி, ஆந்திராவும் சென்னையும் ஒன்றாக இருந்த சென்னை ராஜதானியில், கடப்பா ஜில்லாவில், பொட்டிப்பாடு என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்து, பின், சென்னை வந்தவர். பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.
பதினான்கு மொழிகளில், வெளிவரும், ‘அம்புலிமாமா’ என்ற சிறுவர் பத்திரிகையை தோற்றுவித்தவர். தனது விஜயா – வாகினி கம்பைன்ஸ் மூலம் பல அருமையான திரைப்படங்களை வழங்கியவர். புகழ்பெற்ற இரு மருத்துவமனைகளை நிறுவியவர். இந்திய திரைப்பட உலகிற்கு அவர் ஆற்றிய பணிக்காக, ‘தாதா சாகேப் பால்கே’ விருது பெற்றவர். திருப்பதி தேவஸ்தான வாரியத்தின், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பக்தர்களின் வசதிக்காக முன்யோசனையுடன், பல வசதிகளை செய்து தந்தவர்.
‘‘எல்லாம் என் நண்பர்கள், பணியாளர்கள் இவர்களுடைய ஒத்துழைப்பாலும், ஆண்டவனின் அருளாலும் நிகழ்ந்தவை,’’ என்று கூறி, மிக அடக்கமாக வாழ்ந்தவர். அவர் வாழ்வில் நிகழ்ந்த பல சுவையான நிகழ்ச்சிகளை இந்த நூல், நினைவு கூர்கிறது. கட்டுரைகள், 1980களில், ‘பொம்மை’ திரைப்பட இதழில் வெளிவந்தவை. இப்போது மிக எளிய ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கிறது.
மயிலை சிவா