சிறந்த நூல் என்பது, புத்தகத்தின் கட்டமைப்பில் இல்லை; அதன் கருத்தில் உள்ளது என்பதை விளக்கும் வகையில் இந்த நூல் வெளிவந்துள்ளது. தமிழகத் தலைவர்களில், மூதறிஞர் ராஜாஜி முதல், கம்யூ., தலைவர் பி.ராமமூர்த்தி வரையிலான, 10 தலைவர்களின் வரலாற்று சம்பவங்களை, இந்த நூல் முன்வைக்கிறது.
1939ல், பூண்டி குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தவர் சென்னை மேயராக இருந்த தீரர் சத்தியமூர்த்தி; காந்தியின் விமர்சனத்தால், மனம் உடைந்த காமராஜர், தமிழ்நாடு காங்., தேர்தல் கமிட்டியில் இருந்து ராஜினாமா செய்தார்; முத்துராமலிங்கத் தேவர், தாழ்த்தப்பட்ட இளைஞரை, தன் வீட்டிலேயே தங்க வைத்து படிக்க வைத்தார்; மூப்பனாருக்கு, இசையில் மிக்க ஆர்வம் உண்டு என, தலைவர்கள் வாழ்வின் சம்பவங்களை (சில, அவர் நேரடியாக கண்டவை) தொகுத்திருக்கிறார்.
தமிழகம் மறக்க கூடாத தலைவர்களை, நமக்கு நினைவூட்டி இருக்கிறார்.
சி.சுரேஷ்