ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள இறைவனுக்கு, திப்பு சுல்தான் அளித்துள்ள அன்பளிப்புகளை, இந்த நூல் பட்டியலிட்டுக் காட்டி, அவரின் மதச்சார்பின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளது. இருபத்தொரு தலைப்புகளில் திப்புவின் வரலாற்றை தரும் இந்த நூல், ஒரு வரலாற்று நூல் எனும் நிலையை தாண்டி, ஆவணம் எனும் நிலையை அடைந்திருப்பதைக் காண முடிகிறது.
சாதாரண வீரனைப் போல் போரில் உயிர்விட்ட திப்புவின் உடல், காவிரி கரையில் அடக்கம் செய்யப்பட்டது என்பதை வெளிப்படுத்தும் போது, நூலாசிரியர் காட்டியுள்ள திப்புவின் கம்பீரம், படிப்போர் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் வகையில் அமைந்துள்ளது.
‘இன்றில்லையேல் நாளை சாவு என்ற நிலை தான், போர் வீரர்கள் தலையெழுத்து. அதனால், அமைதியான ஒரு வாழ்வை, அவர்கள் ஒருபோதும் சிந்தித்து பார்ப்பது இல்லை. அப்படிப்பட்ட அமைதியான வாழ்க்கை, பல மன்னர்களுக்குக் கொடுத்து வைத்திருந்தாலும், மாவீரன் திப்பு சுல்தானுக்கு, அது விதிக்கப்படவில்லை’.
முகிலை இராச பாண்டியன்