தன் வாழ்க்கையின் பல பக்கங்களை ஆசிரியை பதிவு செய்கிறார். இவர், கோபிசெட்டிப் பாளையம் பி.கே.ஆர்., மகளிர் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறை விரிவுரையாளர். இவர் எழுதுகிறார் – ‘ஜீவா என்று ஒரு மாணவி. ஜீவா எனக்கு அறிமுகமான நாளை அசை போடுகிறேன். முதல் நாள் வகுப்பில், மாணவியர் தங்கள் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டு இருந்தனர். ‘என் பேர் ஜீவா’ என்ற ஜீவாவிடம், ‘ஜீவான்னு ஒரு தலைவர் இருந்தாரே தெரியுமா?’ என்றேன். ‘தெரியாது’ என்றாள். ‘நாளைக்குத் தெரிஞ்சுக்கிட்டு தான் கிளாசுக்கு வரணும்’ என்றதும், அழ ஆரம்பித்து விட்டாள்.
‘எனக்கு அவரைப் பற்றி தெரியாது மேம்’ என்று அழுதவளிடம், ஜீவாவைப் பற்றி எனக்குத் தெரிந்த செய்திகளைச் சொன்னேன்.
‘இப்படிப்பட்ட ஒரு தலைவரோட பேரை வச்சிருக்கறது எனக்கு சந்தோஷமா இருக்கு மேம்’ என்று தழுதழுத்தாள்...’இப்படி சிலிர்ப்பூட்டும் பல தகவல்கள். படிக்கத் தெவிட்டாத பக்கங்கள்.
எஸ்.குரு