முருகப்பெருமானின், தொண்டர்களை பற்றி விவரிக்கும் நூல். அகத்தியர், நக்கீரர் துவங்கி, திருமுருக கிருபானந்தவாரியர் வரை, 37 முருக தொண்டர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்கள் பரவசத்துடன் தொகுக்கப்பட்டுள்ளது. சக்தி விகடன் இதழில், இந்த கட்டுரைகள் தொடராக வெளிவந்த போதே, ஆன்மிக அன்பர்களின் பாராட்டைப் பெற்றது. இப்போது, புத்தக வடிவில் வெளிவந்திருக்கிறது.
‘இறைவனை, தன் உள்ளக் கமலத்துக்குள் அடக்கி வைத்திருக்கும், அவரது தொண்டர்களின் பெருமை தான், பெரியது’ என்ற, அவ்வையாரின் வாக்குடன், இப்புத்தகம் துவங்குகிறது. ஓவியர், பத்மவாசன், முருகப்பெருமானை அற்புதமாக வரைந்துள்ளார்.
சேந்தனாரின் இல்லம் தேடிச்சென்று, இறைவன் களி உண்ட கதை; நிரோஷ்டகம் என்றால் என்ன; பார்வையற்ற வீரராகவர் உள்ளிட்ட எண்ணற்ற முருகனின் தொண்டர்கள் வாழ்வில் நடந்த அற்புதங்களை அழகாக விவரித்துள்ளார், இந்நூலின் ஆசிரியர்.
சரண்யா சுரேஷ்