அத்தியாவசியத்தின் வேராக இருப்பது பணம். அதன் குணம் என்ன? நியாயமான முறையில், எந்தெந்த வகையில், அதை ஈட்டலாம் என, விவரிக்கிறது இப்புத்தகம். இப்புத்தகத்தின் ஆசிரியர், பங்கு சந்தை வியாபாரத்தில், 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். இந்த நூலில், மொத்தம், 46 கட்டுரைகள் உள்ளன. அனைத்தும், ஒன்றிலிருந்து ஒன்று என்ற சங்கிலி தொடராக செல்வது சிறப்பு. ‘பணம் இல்லாமல் வாழ்க்கையே இல்லை; பணம் அத்தியாவசியம் என்ற நியதியைக் கொண்ட உலகில், திண்டாடாமலும், தடுமாறாமலும் இருப்பதற்கு, வழிகளை கண்டு தேறுவது அவசியம்’ என்கிறார், இப்புத்தக ஆசிரியர். தேவையற்ற பொருட்கள் வாங்குவதை தவிருங்கள்; சம்பாதிக்கும் பணத்தின் பெரும் பகுதியை, சேமிக்க முயற்சி செய்யுங்கள் என, நம்மோடு, தோழமையாக, நண்பர் பேசுவது போன்ற உணர்வை, இப்புத்தகம் தருகிறது.
பணவளக் கலையில், ரிஸ்க் எடுக்க தயங்காதீர்; பணத்தை பார்ட்னராக நினையுங்கள்; வேலை மட்டுமே, ஒருவரை பணக்காரன் ஆக்காது; வாய்ப்புகள் கிடைக்கும் போது, பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; ‘நெட் வொர்க்’ கின் முக்கியத்துவம் உள்ளிட்ட, பல அறிவுரைகளை, நம்பிக்கை வார்த்தைகளோடு, இப்புத்தகம் தருகிறது.
சி.சுரேஷ்