ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியான, ராவ் எல்.சி.குருசாமியின், 1923 முதல் 1930 வரையிலான சட்டமேலவை உரைகள் தொகுக்கப்பட்டு, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 80 ஆண்டுகளுக்கு முந்தைய, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலை, உரைகளின் வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘‘பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று நம்பிக்கை உடையவர்களைச் சேரிகளில் பணி செய்ய நியமனம் செய்வது, பயனற்ற ஒன்று. சேரிகளில் உண்மையாகவே சிறப்பான அளவுக்கு பணிகள் நடைபெற வேண்டும் என நீங்கள் விரும்பினால், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை நியமனம் செய்யுங்கள்,’’ என்ற இவரின் கோரிக்கை, முக்கியமானது.