இதில் 10 கட்டுரைகள் உள்ளன. முழுக்க மாற்றுப் பார்வை கொண்டவை. தலைப்புக் கட்டுரை ஒரு புத்தம் புதிய பார்வையை முன் வைக்கிறது. சங்க இலக்கியத்தில் வரும், ‘இழிசினன்’ என்ற சொல்லுக்கு, வேறு ஒரு பார்வையையும், கருத்தியலையும் முன் வைக்கிறார் நூலாசிரியர். இந்த ஆய்வினால், 2000 ஆண்டு இலக்கிய ஆய்வு தலைகீழாக மாறுகிறது.
மேலும், மகாபாரத பாத்திரங்களை மீண்டும் புனைவுகளில் கட்டமைக்கும் இலக்கியக் கூறுகள் பற்றி, தீபாவளி என்பது ஆதித் தமிழனின் மரபான பண்டிகையாக இருந்ததை மாற்றி, இந்துத்துவப் பண்டிகையாக கட்டமைப்பு செய்யும் கூறுகள் பற்றி, இன்னும் பல்வேறு கருத்துக்களைக் கட்டுடைத்து, புதிய மாற்றுப் பார்வைகளை முன் வைக்கும் நூல்.