கருணாநிதி, அரசியல்வாதி மட்டும் அல்ல; தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஏராளமான படைப்புகளை தந்த இலக்கியவாதியும் கூட! திரையுலகில் திரைக்கதை, வசனம், பாடல்கள்; மேடைகளில், அடுக்கு மொழி பேச்சு; எழுத்துலகில், உரைநடை, சிறுகதை, புதினம் என, பன்முகம் காட்டியவர் கருணாநிதி.
இலக்கிய உரைகள் நான்கு, பயண நூல்கள் இரண்டு, 27 நாடகங்கள், 64 சிறுகதைகள், 14 புதினங்கள், 10 கவிதை நூல்கள், 64 திரைப்படங்கள், ஒன்பது சுயசரிதை நூல்கள், 21 கட்டுரைகள், 35 சொற்பொழிவுகள், கடிதங்கள் 12 தொகுதிகள் என, கருணாநிதியின் படைப்புகள் அத்தனையையும் ஆய்வு செய்து, ஒரே நூலாக வெளிக்கொண்டு வந்திக்கிறார், இந்நூலின் ஆசிரியர்.
தமிழ் இலக்கிய உலகில், கருணாநிதியின் சாதனை என்ன என்பதை, ஆசிரியர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
சி.சுரேஷ்