நடுக்குவாதம் பற்றிய ஐயங்களையும் அச்சங்களையும் களையும் வண்ணமும், விழிப்புணர்வை உருவாக்கும் வகையிலும் எளிய நடையில் இந்த நூல் அமைந்துள்ளது. நோயின் அறிகுறிகள், நோய் வருவதற்கான வாய்ப்புடையோர், நோய் காண் சோதனைகள், மருத்துவ முறைகள், உட்கொள்ள வேண்டிய மருந்துகள், செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் - என ஒன்றுவிடாமல் தெளிவாக, விரிவாக, விளக்கமாக, அதேநேரம் எளிமையாக, படங்களுடன் நூலாசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார். ஆறுவிதமான அறிகுறிகளுடன் வெளிப்படும் இந்நோய்க்கு நூலாசிரியர் தந்துள்ள பெயர், ‘ஆறுமுகமுடையான்’. இந்த நோய் எந்த வயதில் வரும், பெண்களுக்கும் வருமா, நோயில் இருந்து முழுமையாக விடுபட முடியுமா, இந்த நோய் மரபு வழிப்பட்டதா, இந்த நோயால் பாதிக்கப்பட்ட பிரபலங்கள் யார் என, பல கேள்விகளுக்கும் இந்த நூல் விடை அளிக்கிறது. மருத்துவ மாணவர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், நோயாளிகள் - என அனைவரிடமும் இருக்க வேண்டிய கையேடு இது.
முனைவர் இராஜ. பன்னிருகைவடிவேலன்