அண்ணல் காந்தியடிகளுக்கு டால்ஸ்டாய் எழுத்துக்களில் அலாதியான ஈர்ப்பு உண்டு. ஆங்கிலத்தில் வெளியான, ‘தி காஸ்பெல் இன் பிரீப்’ என்ற டால்ஸ்டாய் நூலின் மொழிபெயர்ப்பு இந்த நூல்.
டால்ஸ்டாயின் இந்த நூலில் காணப்படும் இறையியலும் காந்தியின் ஆன்மிகமும் எந்தப் புள்ளியில் இணைகின்றன என, எடுத்துக் காட்டுவதற்கான ஒரு நூல் இது.
டால்ஸ்டாய்சுக்கு ஒரு மனக்குறை உண்டு. அதாவது மத நிறுவனங்களும் சரி, மத போதகர்களும் சரி, ஏசுவின் அறஉரைகளை கைவிட்டு விட்டனர் என, வெளிப்படையாகவே இந்த நூலில் எடுத்துக் காட்டுவது மட்டுமில்லாமல், அந்த அறஉரைகளின் சரியான பொருளையும் மிக இயல்பான மொழியில் விளக்குகிறார்.
அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல். ஆனால், வேண்டாத இடங்களில் எல்லாம், ‘க்’ ‘த்’ ‘ப்’ இவைகளை போட்டு இயல்பான வாசிப்பு அனுபவத்தை குறை(லை)த்திருக்கின்றனர்.
– சிவா.