கடந்த, 2013 ஜனவரி, 19ம் நாள் தொடங்கி, 2014 டிசம்பர் 27ம் நாள் வரையில் இரண்டு ஆண்டுகள் தினத்தந்தியில் ஆசிரியர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. ஆரூர்தாஸ், 1,000 படங்களுக்கு மேல் (டப்பிங் படங்கள் உட்பட) வசனம் எழுதியுள்ளார். இது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறக்கூடிய உலக சாதனை.
இவரது சினிமா வாழ்க்கையில், 1960ம் ஆண்டு ஒரு திருப்புமுனை ஆண்டாக அமைந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு முதன் முதலாக, பாசமலர் படத்திற்கு வசனம் எழுதினார். அது அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது!
சிவாஜிக்கு இவர் வசனம் எழுதிய படங்களின் எண்ணிக்கை, 28. எம்.ஜி.ஆருக்கு எழுதிய பாடல்கள் 21. திரை உலகில் நீண்ட காலம் பவனி வந்ததால், இவர் பழகாத நடிகர், நடிகையர், டைரக்டர்கள், பட அதிபர்கள், பாடகர்கள், பாடகிகள் அனேகமாக எவரும் இல்லை. குருநாதர் தஞ்சை ராமையாதாஸ் அவர்களால் ஆரூர்தாஸ் ஆக்கப்பட்ட இந்த ஜேசுதாஸ் பல பிரபலங்களைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்த நூலில் காணலாம்.
எஸ்.குரு