சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ், தென் மாநிலத்தில், 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்த முதல் நிறுவனம்.
தமிழ் மட்டுமல்லாமல், முதன் முதலில் மலையாளம், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழி படங்களை உருவாக்கிய நிறுவனம், மாடர்ன் தியேட்டர்ஸ் தான். தமிழில், முதன் முதலில் முழு நீள வண்ணப்படத்தை தயாரித்ததும், மாடர்ன் தியேட்டர்ஸ் தான்.
பின்னாளில் பிரபலமான பல கதாசிரியர்கள், வசனகர்த்தாக்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிக – நடிகையர் என, பல தரப்பட்ட கலைஞர்களை உருவாக்கிய பெருமை, மாடர்ன் தியேட்டர்சுக்கு உண்டு.
தொடர்ந்து, 45 ஆண்டுகள் சினிமாத்துறையில் ஆட்சி செய்து வந்தது, மாடர்ன் தியேட்டர்ஸ். சினிமா துறையில், சாதனைகள் பல புரிந்தது. தமிழ் திரைப்பட வரலாற்றில், மாடர்ன் தியேட்டர்சுக்கென்று, தனி இடமுண்டு. அது ஒரு சகாப்தம்.
–என்.எஸ்.,