உலகில் நாம் பார்க்க விரும்பும் மாற்றம், முதலில் நம்மிடமிருந்து நிகழ வேண்டும் என தன்னைத் தானே மாற்றிக் கொண்டவர். சொல்லும் செயலும் சரியாக இருக்க வேண்டும் என்ற கொள்கை வழியில் நேர்மையின் திலகமாகவும், மகாத்மாவின் சத்திய சோதனைக்கு எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்தவர். தன் வாழ்நாள் முழுவதும் ஏழ்மையில் இருந்து ஏழைகளுக்காகவே வாழ்ந்தவர். ‘உள்ளத்தில் உண்மை, பேச்சில் வாய்மை, செயலில் துாய்மை’யால், தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் காமராஜர்.