நம் நாட்டின் முதுகெலும்பான கிராமங்களில் தான் பழமையின் அடிச்சுவடுகள் பதிந்து கிடக்கின்றன. திரும்பும் பக்கங்களில் எல்லாம் காட்சி தரும் எந்த பொருளாக இருந்தாலும், அது ஒரு கல்லாக, ஒரு உடைந்த ஓடாக, பாறையில் பொறிக்கப்பட்ட ஒரு சுவடாக என எதுவாக இருந்தாலும் அதில் ஒரு வரலாறு ஒளிந்திருக்கும். இவை தான் நம் வரலாற்று பொக்கிஷங்கள்.
இந்த தொன்மையான அடையாளங்களை கல்வெட்டுகளாய், ஓலைச்சுவடிகளாய், பழமையான பொருட்களாய் அதில் கிடைக்கும் தவகவல் திரட்டுகளை பள்ளி மாணவர்களை கொண்டு திரட்டி, ஒரு அரும்பெரும் தொகுப்பாய் வெளியிட்டுள்ளார் ஆசிரியர் ராஜகுரு.
திருப்புல்லாணி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியரான இவரது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புத்தகம், ராமநாதபுரம் மாவட்டத்தில் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கும். பள்ளி மாணவர்களின் அளப்பரிய பணிகளாய் வெளிவந்துள்ள இந்த புத்தகம், மாணவ சமுதாயத்திற்கு பல புதிய பாதைகளை வழிகாட்டும்.
–வின்