உயிர் பெரிதல்ல... உயிலே பெரிதென்று வாழும் வேலம்மா போன்ற வேடதாரிகளின் முகமூடிகளை கிழித்தெறிகிறது, ‘சொத்து!’ வரவு எட்டணா, செலவு பத்தணா என்ற கணக்கு நெசவாளருக்கும் பொருந்தும் என்பதை, ‘மொட்டை’ என்ற சிறுகதை மூலம் பதிவு செய்கிறார். இந்நுாலில் உள்ள சிறுகதைகள், பகுத்தறிவு வெளிச்சம் மற்றும் அறியாமை இருளை நீக்குவதாக அமைந்துள்ளன.