‘காலம் கருதினால் ஞாலமும் கைகூடும்’ என்பது வள்ளுவர் வாக்கு. காலம் கருதி வாழ்ந்தவர்கள் தான், காலம் கடந்தும் வாழ்கின்றனர் என்பதை புது மொழியாகக் கருதலாம். இந்நுால் சிறிதாயினும், நேரத்தின் அருமையையும், அதை மேலாண்மை செய்யும் வழி வகைகளையும், அதனால் அடையப் பெறும் வெற்றியையும், சிறந்த உதாரணங்களுடன் கூறுகிறது.