நீதிபதி பிரபா ஸ்ரீதேவனின், ‘ஆப் வைன்யார்ட் ஈகுவாலிட்டி’ எனும் ஆங்கில நுாலின் தமிழாக்கம் இந்நுால். தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியும், வழக்குரைத்தும் வல்லமை பெற்ற நீதியரசி எழுதிய, 20 கட்டுரைகள் அடங்கிய இந்நுாலில், சமூக நீதியை சரியாக உணர்த்தும் திறனையும், எடுத்துரைக்கும் கருத்துகளின் மீதுள்ள நியாயமான போக்கையும் காண முடிகிறது.
மூன்றாம் பாலினத்தவரின் கவுரவத்திற்கான உரிமை குறித்து கூறும் நுாலாசிரியர், நேபாள உச்ச நீதிமன்றம் யோக்கர்த்தா கொள்கைகளைப் பயன்படுத்தி, தம் கருத்தை வெளிப்படுத்துகிறார். ‘மனிதக் கழிவுகளில் புதைந்து போன ஜனநாயகம்’ என்ற கட்டுரையில், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்ற வேண்டும் என்ற செயலை, ஒரு ஜாதியுடன் தொடர்புபடுத்துவது ஒரு வகை திணித்தல் என்கிறார் (பக்., 40).
பெண்கள் பற்றிய கட்டுரைகளில் பாலியல் துன்புறுத்தல், பெண்கள் பாதுகாப்பு, பெண்களும் மனித உரிமையும் போன்றவை சுட்டிக்காட்டத்தக்கன. பெண்ணிற்குப் பாதுகாப்பானது என கருதப்பட்ட இடம் தான், பெண்ணுக்கு பாதகமாக அமைகிறது என்பது, சிதம்பரம் பத்மினி, மீரா நிரேஷ், வாலியா ஆகியோரின் வழக்குகளில் இருந்து தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
பெண்களுக்கான உரிமை குறித்து பேசும்போது, ‘அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார வாழ்வில் சம பங்கு அளிப்பதற்கான உரிமை அவளுக்கு உள்ளது’ என்று குறிப்பிடுகிறார் (பக்., 55).
சட்டங்களின் மூலம் உருவாக்கப்பட்ட அறிவுசார் சொத்துரிமைகளை, மனித உரிமைகளுக்கு சமமாக கருத முடியுமா? என்ற வினாவின் விளக்கத்தை, சில கருத்துரு மூலம் விவரிக்கிறார் நுாலாசிரியர் (பக்., 77 – 80). இந்த நுாலில் அமைந்த கட்டுரைகளில், மிகவும் குறிக்கப்பட வேண்டிய கட்டுரைகளாகத் திகழ்வன.
–ராமகுருநாதன்