பிரமாண்டமான விருட்சத்தைப் போன்றது பவுத்தம். பல படிமங்களைக் கொண்டது.
பவுத்தம் உலகம் பரவிய சமயமாக இருந்த காலகட்டங்களுக்கு முன், தமிழகத்தில் செல்வாக்கு மிக்கதாக இருந்தது. பேரரசர் அசோகர் காலத்தில் பவுத்தம் இந்தியாவில் பெரிய அடையாளத்தை பெற்றிருந்தது.
அதற்கு முன் தமிழகத்தில் பவுத்தச் சிந்தனை ஏறக்குறைய 13ம் நுாற்றாண்டுவரை, பிற்கால சோழப்பேரரசு வீழ்ச்சியுறும்வரை செல்வாக்கான சமயமாக இருந்திருக்கிறது.
பவுத்தம் குறித்தும் பவுத்தச் சிந்தனைகளைப் பற்றியும், அது இலக்கியங்களில் பெற்றிருக்கும் அடையாளம் பற்றியும் தெளிவான பார்வையை இந்த நுால் முன்வைக்கிறது.
பவுத்தத்தின் அடிப்படை மந்திரங்களான புத்தம், தர்மம், சங்கம் என்பவை வெறும் மந்திரங்கள் மாத்திரமல்ல, அவை மனித வாழ்வியலின் மூன்று அங்கங்கள் என்றும் குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.
பவுத்தச் சிந்தனைகளை முன் வைப்பதன் வழியாக ஆய்வே வழிபாடு, நுால்களே காணிக்கை என்று அடையாளப்படுத்துகிறது இந்த புத்தகம்.
– ஸ்ரீநிவாஸ் பிரபு