ராஜா பர்த்ருஹரி கால அரசியல் சூழ்நிலையையும், தற்போதைய நகர வாழ்வையும் இணைத்து எழுதியுள்ள நாவல். சாகித்ய அகாடமி விருது பெற்ற ஒரிய எழுத்தாளர் மனோஜ் தாஸ் எழுதியுள்ளார். தமிழாக்கம் செய்தவர் இளம்பாரதி.
டில்லி, கனாட் சர்க்கிள் பகுதியில் இருந்து, நாவல் நகர்கிறது. கதை மாந்தர்களின் பேச்சு, கால வேறுபாட்டுக்கு தக்கவாறு அமைந்துள்ளது.
புராதனத்துக்குள் இருக்கும் நவீனத்தை, ‘ஒருவன் மலையை செதுக்கிக் கொண்டிருந்தான். குகைக்குள் இருந்த சிலர் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவர்கள் வரலாறு சார்ந்தவர்கள். இன்று நகரங்கள் உருவானதால், புராதனப் புனிதத் தலத்தில் இருந்த குகைகள் வீடுகளுக்குள் மறைந்து விட்டன’ என, குறிப்பிட்டுள்ள இடம் அழியும் வரலாற்றை பறைசாற்றுகிறது. கருத்துகள் நிரம்பிய நாவல்.
– டி.எஸ்.ராயன்