முகப்பு » தமிழ்மொழி » திருவள்ளுவரின்

திருவள்ளுவரின் இன்பியல் கோட்பாடுகள்

விலைரூ.140

ஆசிரியர் : ஆ.இரத்தினம்

வெளியீடு: கலைக்கோ

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்:

Rating

பிடித்தவை
திருக்குறள் ஆராய்ச்சி என்பது ஒரு தொடரோட்டம். திருக்குறளில் காணப் பெறும்  கருத்துகளை உள்ளம் சார்ந்த இன்பியல், சொல் சார்ந்த இன்பியல், செயல் சார்ந்த இன்பியல் ஆகிய மூன்று கோட்பாடுகளை விளக்குகிறது.

திருக்குறளில் ஆழ்ந்த ஈடுபாடுகொண்டவரால் எழுதப்பட்டுள்ளது. வள்ளுவர் வைதீக மத எதிர்ப்பாளர் என்பது இவரது துணிபு. இவ்வகையில், துறவு  அதிகாரத்தை இவர் அணுகியுள்ள முறை புதியது. முன்னோரின் கருத்துகளை ஏற்றும், மறுத்தும் தடை விடைகளால் நிறுவியும், துணிந்து வலியுறுத்தி இருப்பது பாரட்டும்படி உள்ளது.

குடிசெயல் வகை , நாணுடைமை அதிகாரங்களைப் புதிய கோணத்தில் கண்டிருக்கிறார். உரையாசிரியர்களின் கருத்துகளை, குறிப்பாக பரிமேலழகர், நாமக்கல்லார், பாவாணர், கு.மோகனராசு கருத்துகளை மறுத்துள்ளார். தம் கருத்தினை நிறுவியிருக்கிறார். ஒவ்வொரு கருத்தையும் கூர்ந்து ஆய்ந்து படைக்கப்பட்டுள்ள நுால்.
ராம.குருநாதன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us