திருச்சி மாவட்ட எழுத்தாளர்களின் 21 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நுால். மழபாடி ராஜாராமின் மவுனமொழி, விழுதுகளின் எழுச்சி, வேரின் மகிழ்ச்சி, பா.சேது மாதவனின் மனத்திறப்பு, கரையான், துறையூர் முருகேசனின் அருக்காணி, மாற்றும் ஏமாற்றும், மாராட்டி எம்.ஏ.ரமேஷின் திருத்தி எழுதிய கதை, உளி தாங்கும் கற்கள், கவுசிகனின் நான் இறந்து இருக்கிறேன், ஒன்றானோம்- ஒன்றாவோம், மிலிட்டரி போஸின் துரோகம் ஆகியவை சிறப்பாக உள்ளன.
மூகாதேவி மகேஷின் ஆவியுடன் ஒரு நேர்காணல், பாசக் குடும்பம், ஜனனி அந்தோணி ராஜின் சொன்னால் தான் காதலா, தாரிகா என்னும் காயத்ரி, ஐ.கிருத்திகாவின் தாய் மந்திரம், மெத்தை. இரா.சின்னதுரையின் இரும்புக் கதவு, தட்டுவண்டி, மதியின் மறப்பதற்கு மனிதன் அல்ல என்னும் சிறுகதைகளோடு, தொகுப்பாசிரியர் நந்தவனம் சந்திரசேகரனின் மகிழ்ச்சி ஆகிய கதையும் உள்ளது. வாசகர்களுக்கு நல் விருந்தாய் அமையும்.
– ராமலிங்கம்