பிரபல எழுத்தாளர் மறைந்த லா.ச.ராமாமிர்தம் வாழ்க்கை மற்றும் படைப்புகள் பற்றிய விபரங்கள் அடங்கிய நுால். அவரது எழுத்து பணிகளை சிறப்பித்து கவுரவிக்கும் விதமாக இந்திய இலக்கிய சிற்பிகள் என்ற வரிசையில் வெளியிடப்பட்டுள்ளது.
புனைவில் தனிபாணி கண்டு வானவில்லை உடைத்து எழுத்தாக்கியவர் லா.ச.ரா., அவரைப்பற்றி எழுதப்பட்டுள்ள 15 கட்டுரைகளுடன் உள்ளது. அவரது புனைவில் உள்ளடங்கியிருந்த விஷயங்கள் பற்றி எல்லாம் எழுதப்பட்டுள்ளது.
அவரது சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் பற்றி தனியாக ஒரு கட்டுரை உள்ளது. அவரது இயற்கை வர்ணனை குறித்தும் சுவாரசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எழுத்தின் நேர்த்தி, தத்துவ விசாரணை என பல்வேறு அம்சங்கள் குறித்தும் தகவல்கள் உள்ளன. மறைந்த எழுத்தாளரின் அயரா உழைப்பின் பின்னணி குறித்த தகவல்களும் உள்ளன. தமிழ் இலக்கியத்தில் முக்கியமான நுால்.
– பாவெல்