கவிதையியல் பற்றிய கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பு நுால். பத்து கட்டுரைகள் ஆய்வு நோக்கில் எழுதப்பட்டவை. பெரும்பாலும் யாப்பை அடிப்படையாகக் கொண்டவை.
நச்சினார்க்கினியர் உரை வழி எழுத்துகளின் ஒலி வடிவம், வரி வடிவம் பற்றிய கருத்துகளை மொழியியல் அறிஞர்களான தெரிதா, சசூர் ஆகியோருடன் பொருத்திக் காட்டியிருப்பது புதிய சிந்தனை.
செ.வை.சண்முகம் எழுதியுள்ள உவம வகைகள் குறித்த கட்டுரை உவமை, உருவகம் பற்றி மிக விரிவாக ஆராய்கிறது. மெய்ப்பாடு குறித்த இந்திரா மனுவேலின் கட்டுரை ஒப்பியல் நோக்கில் அமைந்துள்ளது. காலமாற்றத்திற்கேற்ப திணை கோட்பாடு பெற்றிருக்கும் இயல்பை புலப்படுத்துகிறது, சதீஷ் எழுதிய கட்டுரை. பதினெண் கீழ்க்கணக்கு நுால்களில் அமைந்துள்ள வெண்பா பற்றிய பார்வையை விரிவாகத் தருகிறார்.
புறப்பாடல்களில் இலக்கிய மரபு குறித்த ஆய்வுப் பார்வை சுட்டிக்காட்டத்தக்கது. அதே போல் வாய்மொழிப் பாடல் மரபை ஒட்டி ஆராய்கிறது காமராசுவின் கட்டுரை. புதிய கண்ணோட்டங்களைச் செலுத்தியுள்ளன. தமிழ் ஆய்வாளர்களின் பயன்பாட்டுக்கு உதவும்.
– ராம.குருநாதன்