இந்திய சமூகத்தில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய தாது வருடப் பஞ்சம் பற்றி எழுதப்பட்டுள்ள முக்கிய நுால். ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு கொண்டு வந்துள்ளார் வானதி. மெட்ராஸ் மாகாணம், கிருஷ்ணா நதியின் தெற்கு கரை முதல் கன்னியாகுமரி வரை பரவியிருந்தது. மைசூரும், மலபாரும், ஹைதராபாதும் மட்டுமே உள்ளடங்காதவை.
இந்த பெரும் பரப்பில் ஏற்பட்ட பஞ்சம் பற்றி விவரிக்கிறது. பஞ்சத்தால் மக்கள் இறப்பதைக் கூட பொருட்படுத்தாத ஜாதிப்பற்று பற்றி எல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிவாரணமாக கொடுத்த உணவுப் பொருளை ஜாதிக் கட்டுப்பாடு என்ற நிலையில் வாங்க மறுத்தது போன்ற விபரங்கள் பதிவாகியுள்ளன. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நிலவிய பஞ்ச நிலை பற்றி பல்வேறு விபரங்களை பதிவு செய்துள்ளது. இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நுால்.
– மலர்