முகப்பு » கவிதைகள் » தாகூரின் கீதாஞ்சலி

தாகூரின் கீதாஞ்சலி தொகுதி – 1

விலைரூ.80

ஆசிரியர் : பாலா சிவசங்கரன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய கீதாஞ்சலி கவிதைத் தொகுப்பு நுாலின் தமிழாக்கம். மொத்தம் 40 கவிதைகள், ஒப்பிட்டு வாசிக்கும் வகையில் ஆங்கில மூலத்துடன் தரப்பட்டுள்ளன. தமிழில் புனையபட்ட கவிதைகள் போல் உள்ளன.

ஆங்கிலம் வாயிலாக மூலம் நுாலின் ஒரு பக்கமும், அதற்கான தமிழாக்க கவிதை மறுபக்கமும் என பொருத்தமாக  வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, மூலக் கவிதையின் பொருள் உணர்ந்து படிக்க உதவும்.

கவிதைகளின் தலைப்பே, கவித்துவத்தை பறைசாற்றுகிறது. முதல் கவிதைக்கு, ‘சின்னஞ்சிறு கைகள் நிறைவதில்லை’ என நளினமாக தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. தலைப்புகளே நேரடியாக கவிதையின் பொருளை உணர்த்துகின்றன.

அன்பு, நம்பிக்கையை காட்டி நெகிழ வைக்கின்றன. அச்சமற்ற மனம், பயமற்ற வாழ்க்கை தேடலுடன் நோபல் பரிசு வென்றவரின் படைப்பாக்கம். அனைவரும் படிக்க உகந்த நுால்.
– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us