ஞானம் தொடர்பான கேள்வி, சந்தேகங்களுக்கு வழிகாட்டும் வகையில் அமைந்துள்ள நுால். ஞானம் என்பது இன்னது என வரையறுத்து கூற முடியாது. ஞானம் பெற்றவர்கள் அதை ஒவ்வொரு விதமாக அடைந்துள்ளனர்.
ஞானத்தை வரையறைக்குள் கொண்டு வர முடியாது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அறிவுப்பூர்வமான புரிதல் என விளக்கம் தரப்பட்டு உள்ளது. மனதில் பலவித எண்ணங்கள் தோன்றும் போது, அறிவின் கட்டுப்பாட்டிற்குள் இல்லையென புரிந்து கொள்வதும் ஞானம் என விளக்கம் தரப்பட்டுள்ளது.
கடும் தவம் செய்து ஞானம் பெறுவது போல், ஓர் அதிர்ச்சி அல்லது செயல் வாயிலாகவும் ஞானம் பெற முடியும். எல்லாரும் ஞானம் பெற முடியும் என்ற, ஜென் தத்துவக் கூற்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஞானம் பெறும் வழி, அதைப் பெற்றால் மனம் எவ்வாறு இருக்கும் என்ற கருத்துக்களும் கூறப்பட்டுள்ளன. ஞானத்துக்கு வழிகாட்டும் நுால்.
– முகில் குமரன்