மருத்துவம், மருத்துவ கல்வி, மருத்துவர் குறித்த சேவையை அனுபவப் பூர்வமாக தெளிவு படுத்தும் நுால். மருத்துவருக்கான பண்புகளாக நேர்மை, நேரம் தவறாமையை குறிப்பிடுகிறது. பணம் இருந்தால் தான், உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலை அழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது.
மருத்துவ மாணவர்கள், ‘ஏழைகளுக்கு மருத்துவ சேவை செய்வதையே விரும்புகிறேன்’ என கூறும் உறுதிசலிப்படைய வைப்பதாக குறிப்பிட்டுள்ளார். நகரத்தை நோக்கி படையெடுக்கும் மருத்துவர்களை கடுமையாக சாடியுள்ளார்.
ஒரு மருத்துவரை, கல்வி எப்படி உருவாக்குகிறது என, சிறந்த ஆளுமைகளின் விளக்கங்களை பதிவு செய்துள்ளார். சிறந்த மருத்துவராக வாழ்ந்த ஐந்து பேர், வாழ்ந்து கொண்டிருக்கும் ஐந்து பேர் என, ஆளுமைகளின் கடமை, சமூகத்திற்கு ஆற்றிய பங்கு, இதனால் கிடைத்த சிறப்புகளை விவரித்துள்ளார்.
மருத்துவ மாணவர்களுக்கு மதிப்பெண் மட்டும் போதாது, சமூக பார்வை என்ற தகுதி தேவை என துணிந்து கூறும் நுால்.
– டி.எஸ்.ராயன்