ஆசிரியர்- அரிமா ஆர்.எம்.சிவானந்தம். வெளியீடு: ஏகம் பதிப்பகம்,அஞ்சல் பெட்டி எண்:2964, 3,பிள்ளையார் கோயில்தெரு,2 ம் சந்து, முதல் மாடி,திருவல்லிக்கேணி, சென்னை-600 005.பக்கங்கள்:96.திருப்பத்தூர் நகர அரிமா ஆர்.எம்.சிவானந்தம் அவர்கள் எழுதிய சிகரத்தை எட்ட யோகா என்பது நாம் எல்லோரும் வாழ்வின் நற்சிகரத்தை எட்ட ஒரு சிறப்பான நூல்.மன வளர்ச்சிக்கு நல்ல கருத்துக்களை கூறி வருகின்ற இவர் இந்த நூலின் மூலமாக உடல் வளர்ச்சியையும், மன வளர்ச்சியையும் ஊக்கப்படுத்தியுள்ளார்.ஆரோக்கியம் என்பதற்கு அழகான விளக்கமும்,இயக்க விதிகள் ஒழுங்காக நடைபெற யோகா மிகமிக அவசியம், யோகா என்பது ஜீவாத்மாவையும்,பரமாத்மாவையும் இணைப்பது என்பதை திருமந்திர விளக்க உரையுடன் எழுதி உள்ள இந்த நூலை படிக்கும் போதே நமது மன அழுத்தமும், மனம் சார்ந்த நோயும் குறைவது போல தோன்றும். மார்புப் புற்று நோய்க்கு ஏற்ற இரு ஆசனங்களையும் அழகாகக் கூறி உள்ளார். யோகா பயிற்சி செய்யும் இடம், நேரம், முறை, விதிமுறைகள்,பலவகை பாகங்களால் பயிற்சி யாவையும் நாம் நேரில் கேட்டு செய்வதற்கு நிகராக இந்த புத்தகத்தில் எழுதி உள்ளார்.