முகப்பு » பொது » மரணத்தைத் தொட்டு

மரணத்தைத் தொட்டு மீண்டவர்களின் அனுபவங்கள்

விலைரூ.200

ஆசிரியர் : முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: பொது

ISBN எண்:

Rating

பிடித்தவை
மனித வாழ்க்கையில் ரகசியங்களை இறந்தவர்கள் வந்து சொன்னதாகச் சொல்லப்படும் அனுபவ வெளிப்பாட்டை எடுத்துரைக்கும் நுால். இறப்பு பற்றியும், முக்தி என்பது எதை உணர்த்துகிறது என்பதைப் பற்றியும் எடுத்துரைக்கிறது. இறந்த பின் செல்லும் ஒளி உலகம் தொடர்பாக அறிஞர்கள் பல ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளனர். அந்த ஆய்வுகளின் முடிவுகளை எடுத்துரைக்கிறது. 

உடலிலிருந்து வெளியேறும் ஒளி உடல் ஒளியுலகத்திற்குச் செல்கிறது என்றும் உணர்த்த முற்படுகிறது. வாழ்க்கையிலிருந்து விடுபட இயலாதவர்கள் திரும்ப வருகின்றனர் என்றும், ஒளி உலக அனுபவங்களில் ஐக்கியமானவர்கள் அங்கேயே இருப்பதாகவும் தெரிவிக்கிறது.
மனித வாழ்க்கைப் புரிதலுக்கு இவையும் துணைபுரியும் என விளக்கி உரைக்கிறது. ரகசியங்களை அறிய விரும்புவோரைக் கவரும் நுால்.
முகிலை ராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us