சைவ சமயத்தில் உயர்வாக போற்றப்படும் நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரின் வாழ்வை, எளிய நடையில் உரிய இலக்கிய மேற்கோள்களுடன் கதை போல் சித்தரிக்கும் அரிய நுால். அந்த கால காட்சிகளை, 19 அத்தியாயங்களில் நேரில் காண்பது போல் வர்ணித்துள்ளது.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் சுந்தரர். அவரது பிறப்பு முதல் வாழ்ந்த நாட்களில் நிகழ்த்திய அற்புதங்கள், வாழ்வில் நடந்த சிறப்பு நிகழ்வுகள், ஆற்றிய சிவத் தொண்டுகள் பற்றி நேர்த்தியாகச் சொல்லப்பட்டுள்ளது. உரிய இடங்களில் தகுந்த படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆதாரங்களுடன் கூடிய வரலாற்று புதினம் போல் உள்ளது. அந்த கால நிகழ்வுகளை நேரில் காண்பது போல் எழுத்தில் வடித்துள்ளார் ஆசிரியர். நிகழ்வுகளின் விவரிப்புக்கு ஏற்ப, குறிப்பிடப்படும் இடங்களை காட்டும் படங்களும் உரிய பகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளன.
எளிய மொழி நடையில், பொருத்தமான இலக்கிய மேற்கோள்கள், சுவை குன்றா வண்ணம் சேர்க்கப்பட்டுள்ளன. சுந்தரர் பிறந்த நிகழ்வு, அவரது திருமணம், வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்கள், சிவபெருமான் அருட்பார்வையில் செய்த அருந்தொண்டுகள் எல்லாம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. வியப்பான பல செய்திகளும் உள்ளன. தடங்கலின்றி வாசிக்க ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ள ஆன்மிக நுால்.
–
மலர்