முருகன் வரலாற்றையும், பெருமையையும் பேசும் பழமையான நுால். சுவடியிலிருந்து பதிப்பிக்கப்பட்டுள்ளது. கண்டி கதிர்காமம் இலங்கையின் தெற்கு பகுதியில் உள்ளது. கதிர்காமத்தின் சிறப்பு, அங்கு முருகப் பெருமான் அருள்பாலிப்பதை இலக்கிய ஆதாரம் கொண்டு விளக்குகிறது. முருகனுக்குரிய பல பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன.
முருகனிடம் அருள் வேண்டும் நிலையை குறித்துள்ளது. முருகன் வீடு பேற்றை நல்குபவன், அடியவரை ஆதரிப்பவன், அசுரரை அழித்த செயல், வள்ளி மீது முருகன் கொண்ட காதல், அடியவர் துயர் தீர்க்க வேண்டுதல் போன்ற பொருண்மைகளில் அமைந்துள்ளது.
வள்ளியை திருமணம் செய்து, தெய்வானை முன் நின்ற காட்சியை அழகுற படம் பிடித்துக் காட்டுகிறது. தெய்வானையின் உரையாடல் முருகனிடம் விடையை எதிர்நோக்கியுள்ளது. சங்க இலக்கியம் முதற்கொண்டு பல நுால்களை ஒப்பு நோக்கி தகவல்களை தருகிறது. முருகனை வழிபடுவோருக்கும், ஆய்வாளர்களுக்கும் பெரிதும் பயன்படும் நுால்.
– புலவர் இரா.நாராயணன்