கம்பன் பெருமையை கல்வியில் சிறந்தவன், சக்கரவர்த்திப் பட்டம் பெற்றவர், வள்ளல் எனப் பதிவு செய்து, 16 தலைப்புகளில் முழுமையாக ஆய்வு செய்துள்ள நுால். கவிச்சக்கரவர்த்தி கம்பனின் ராமாயணத்தை சிறந்த முறையில் ஆய்வு செய்து வழங்கப்பட்டு உள்ளது. கம்பராமாயணம் பற்றி பல புத்தகங்கள் வெளிவந்துள்ள நிலையில், இது மிகவும் சிறப்புடையது.
கம்பனை மிக உயர்வாக படைத்ததுடன், வடநாட்டு ராமாயணத்தை அப்படியே தமிழில் கொண்டு வராமல் தமிழர் நாகரிகம், பண்பாடு, பழக்க வழக்கங்களை ஒட்டி படைத்ததால், கம்பராமாயணம் தமிழகத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது என விளக்குகிறது. கம்ப ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள், வள்ளல்கள் என அனைவரும் விரும்பும் நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்