அலங்காரமில்லாத, எளியவர்களின் குரலாக ஒலிக்கும் கவிதை தொகுப்பு. வலிமை உள்ளவன் எளியோரை அழித்தால் ஆண்டவன் எதற்கு என கேட்கிறது. நகரமயமாக்கலை, ‘ஆறடி நிலம் சொந்தமென்று யார் சொன்னது? அடுத்து ஒரு இறப்பு நேர்ந்தால், அந்த இடமும் தோண்டப்படும்’ என சாடுகிறது.
நட்பின் ஆயுளை நீட்டிக்க, ‘நட்பை நீட்டிக்கவிரும்பினால், பணம் பரிமாற்றத்தை தவிருங்கள்’ என்கிறது. ஆரோக்கியம் கெடுக்கும் மதுவும், புகையும் விளம்பரம் இல்லாமல் விற்பனையாவதை விவாதிக்க சொல்கிறது.
சோதனை, வேதனையில் புரண்டு சாதிப்பதில், பூரிப்பான வெற்றி கிடைக்கும் என்கிறது. ஒவ்வொரு கவிதையும், மனித மனங்களில் புகுந்து எடுத்த வரிகள். கவிதை எழுத முயற்சிப்போர் வாசிக்கலாம்.
– ராகவ்