சங்க காலத்தை ஒட்டி எழுந்த பதினெண் கீழ்க்கணக்கு நுால்களுக்கு எழுதிய உரையை மையமாகக் கொண்ட ஆய்வு நுால். அறவாணரின் கருத்துகளை வகுத்தும், தொகுத்தும், உரையின் சிறப்புகள் குறித்தும் தமிழ்ப் பேராசிரியர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள் ஆழமானவை.
அறவாணரின் உரை, நூல் உருவாக்கம், புதிய கருத்துகள், பாடபேதம், முந்தைய உரையாசிரியர்களிடமிருந்து கருத்தளவில் காணும் மாறுபாடுகள் எனப் புதிய நோக்கில் எழுதப்பட்டது. எடுத்துக்கொண்ட நுால் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் அறவாணரின் உரையை அகழாய்வு செய்து புலமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
உரை நுட்பம் புத்தாய்வுக்கான வாயிலைத் திறந்து வைத்துள்ளது. அறவாணரின் பதினெண்கீழ்க்கணக்கு நுால்கள் பற்றிய சிந்தனை, இளைய தலைமுறைக்கு பயனுள்ளதாக அமையும்.
–
ராம.குருநாதன்