கம்பராமாயணப் பாடல்களுக்கு விளக்கம் தருவதில் உரையாசிரியர்களின் உத்திகள் பற்றிய தொகுப்பு நுால். வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணத்துக்கு இடையில் உள்ள காட்சி முரண்கள், உரையாசிரியர் சுட்டிய குறைகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
அறவுரைக்கும், அறிவுரைக்குமான வேறுபாடுகளை விவரித்து, கம்ப ராமாயண கதை மாந்தர்கள் வெளிப்படுத்திய அறவுரைகள், அறிவுரைகள் நுட்பமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. காப்பியங்களில் வாழ்வியல் உண்மைகள், காப்பியத்தை நகர்த்திச் செல்லும் களங்கள் காட்டப்பட்டுள்ளன. காப்பிய விறுவிறுப்பு, தொடர்ச்சிக்கு துணை செய்யும் கிளைக் கதைகளின் சிறப்பும் விவரிக்கப்பட்டுள்ளது.
வரங்களும், சாபங்களும் எவ்வகையில் காப்பியத்தின் எழுச்சிக்கு உதவுகின்றன என்று விரிவாகத் தரப்பட்டுள்ளது. ஆய்வு நோக்கில் படிக்க வேண்டிய நுால்.
–
கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு