கவிதை வீச்சுக்களை காட்டி இருக்கும் புத்தகம். அவ்வப்போது தோன்றிய நினைவுகள் குறித்து குறிப்புகளை தொகுத்து கொடுத்து இருக்கிறார். ‘கொடுத்து வைத்தவர் என்று மக்கள் அதிகம் கூறுவது யாரைப் பார்த்து... பணம் படைத்தவனை பார்த்தா... இல்லை. படுத்தவுடன் துாங்கும் அவனைப் பார்த்து...’ என்று ஒரு கவிதை குறிப்பிடுகிறது. நல்ல சொல்லாட்சியும், கருத்தாழமும் கொண்டது.
வலி என்ற வார்த்தையின் முழு அர்த்தம் வலிப்பவனுக்கு மட்டும் தான் தெரியும் என்பதும் உண்மைதானே. உடலின் அயர்ச்சி தாண்டி உள்ளத்தின் முயற்சி கூடி, முன்னேற்ற பாதையில் செல்வது முதுமை என தன்னம்பிக்கையை சுட்டிக் காட்டுகிறது. சிந்தை நிறைக்கும் பாடல்கள் நிறைந்த புத்தகம்.
–
சீத்தலைச் சாத்தன்