முகப்பு » கவிதைகள் » எண்ணங்களை வண்ணமாக்கு

எண்ணங்களை வண்ணமாக்கு

விலைரூ.100

ஆசிரியர் : தி.தாஜ்தீன்

வெளியீடு: நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மாணவ – மாணவியரின் விரக்தியை விரட்டி, மனங்களுக்கு புத்துணர்வு அளிக்க உதவும் கவிதைத் தொகுப்பு. குணமாகப் பழகி, சினமின்றி பேசி, கபடமின்றி சிரி என, மாணவர்களுக்கு அன்பை பொழிகிறது. பார்வையில் நெருப்பு, முகத்தில் துணிவு, பேச்சில் வாய்மை, மாணவியருக்கு இருக்க வேண்டும் என்கிறது.

தவறை மன்னித்தால், தான் செய்த தவறுக்கு பரிகாரம் கிடைக்கும் என்கிறது. ‘வாழும்போதே என்னை அனுபவித்து விடு’ என, வாழ்க்கை சொல்வதை கூறுகிறது. தோல்வியை அதிகம் சந்தித்தால், தன்னம்பிக்கை அதிகரிக்கும்; ஒரு நாள், தோல்வியே தோற்று போகும். ஆயிரம் வெற்றிகளை அடிமையாய் வைத்துவிடலாம் என்கிறது.

உலகில் கிடைக்கப்பெறாத, வாங்க முடியாத ஒன்றாக நேரம் இருப்பதால், ஒவ்வொரு மணித்துளி களையும் சுறுசுறுப்பாக்கி சரியாக பயன்படுத்த அறிவுறுத்துகிறது. சிற்பி, கல்லை சிலையாக்குவது போல், எண்ணங்களை செதுக்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்கிறது. வாழ்க்கையை புரட்டிப் போட வைக்கும் கவிதைகள்.

டி.எஸ்.ராயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us