காதலில் ததும்பி வழியும் புது கவிதைகளின் தொகுப்பு நுால். கடல், மழை, நதி, மலர், நட்சத்திரங்களுடன் ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. வலி நிறைந்த உணர்வுகளையும் கவிதையாக வடித்துள்ளது.
ஒன்றில், ‘கீரை விற்பவள் கேட்கும் போதெல்லாம் இறக்கி வைக்கிறாள் வலியை...’ என நுட்பமாக சொல்கிறது. இயற்கையை மிக அற்புதமாக, ‘பாறை பிளந்த செடியொன்றில் பூத்திருக்கிறது உன் வாசனை’ என சுட்டுகிறது. மவுனம் பேசும் சொற்களாகி விட்டதாக படைப்பில் வெளிப்பட்டுள்ளது.
ஒரு கவிதையில் எல்லை தாண்டிய கற்பனை, ‘உனக்காய் காற்றை உருக்கி வாசித்துக் கொண்டிருக்கும் மூங்கில் காட்டின் யோசனைகள் புரியும்’ என பாய்கிறது. கற்பனையும் சொல் வனப்பும் மிகுந்த புதுக்கவிதைகளின் தொகுப்பு நுால்.
–
மதி