துாய்மை பணியாளர் குடும்பத்தின் துயரத்தை, சமூக அக்கறையுடன் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் நாவல். கணவரின் மருத்துவச் செலவுக்காக, மருத்துவமனையில் துாய்மை ஊழியராக சேரும் பெண் ஆசா பாசத்தை துறந்து வாழ்வதை படம் பிடிக்கிறது.
கழிப்பறை இல்லாத கால அவலத்தை கூறுகிறது. ஜாதிய ஏற்றத்தாழ்வை அலசுகிறது.
மலம் அள்ளுவோர் கீழானவர் அல்ல என புரிய வைக்கிறது. துாய்மை பணியாளரை கண்ணியமாக நடத்த வலியுறுத்தி கையை பிடித்து குலுக்க துாண்டும் நுால். – டி.எஸ்.ராயன்