முகப்பு » கவிதைகள் » மலைபோல் உயர்வோம்!

மலைபோல் உயர்வோம்!

விலைரூ.100

ஆசிரியர் : சீனி.சுந்தரமூர்த்தி

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மொழியின் செறிவையும், மகத்துவத்தையும் அறிய உதவுபவை மரபுக் கவிதைகள். அந்த வகையில் காதல், அறம், புகழ் என பலதரப்பட்ட உணர்வுகள், கவிதைகளாக்கப்பட்டுள்ளன. கற்றறிந்த புலவன் ஒருவர் தன் காதலியிடம் முத்தம் கேட்கும் விதத்தை, ‘கொடுக்கல் வாங்கல்’ கவிதையிலும், காதலியின் சிறுபார்வை கூர்வாளாய் அறுத்தொழிப்பதை, ‘பொற்குழலி’ கவிதையிலும், இவர் சொல்லியிருக்கும் நயம் அழகு.

கல்வியின் மேன்மை, பாரதியின் பெருமை, உவகை நிலைக்க வழி, உறவுப் பேணல் போன்ற கருத்துகளை முன்வைத்து, 60 கவிதைகள் இதில் இடம் பெற்றுள்ளன. இலக்கணத்திற்கு இணங்கி எழுதப்பட்ட இந்தப் புத்தகம், கவிதைகளோடு சேர்த்து பைந்தமிழ் சொற்களை அறிமுகம் செய்கிறது.

– சையத் அலி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us