சமூக அவலங்களை சாடும் நுால். பல்வேறு பொருண்மைகள் அடங்கிய உரைநடை கவிதைகளின் தொகுப்பாக விளங்குகிறது.
சிக்கல்கள் இரு வகைப்படும்; தானாக வரும் சிக்கல்; தாமாக ஏற்படுத்தும் சிக்கல். குடும்ப சிக்கல் வாழ்வை சிதைக்கும்; அரசியல் சிக்கல் ஆட்சியை கவிழ்க்கும் எனப் பதிவிடப்பட்டு உள்ளது. கிறுக்கல்களால் பல இலக்கியங்கள் கிடைத்தன; சிரித்து வாழ்வோம்; பிறர் சிரிக்க வாழோம். நிம்மதிக்கான வழிமுறைகள், சிந்திப்போம் செயல்படுவோம் சிகரத்தில் தாயகத்தை உயர்த்துவோம் போன்ற சிந்தனைகள் அடங்கியுள்ளன.
முதுமை என்பது வரம்; முதுமையைப் பேணுவோம் என அறிவுறுத்தும் பாடல்களும் உள்ளன. சீரிய சிந்தனைகள் அடங்கிய நுால்.
– புலவர் சு.மதியழகன்