சமூக எதார்த்தங்களை முகத்துக்கு எதிராக வெளிப்படையுடன் காட்டும் கவிதைகளின் தொகுப்பு நுால். இனிய சந்தத்துடன் மேன்மையான கருத்துகளை மனதில் பதிக்கிறது.
‘வண்ணமில்லாமல் என்ன வானவில்’ என்ற முதல் கவிதை, எண்ணத்துக்கு பல வண்ணங்களை குழைத்து அடுக்குகிறது. வழக்கமானது வாழ்வு என்பதை நிராகரிக்கிறது. மாற்றதுக்கான கூவலை துணிவுடன் முன்வைக்கிறது.
எளிமையாக, ‘சகித்துக் கொண்டிருப்பதை ரசிப்பதாக நினைத்துக் கொள்கிறது சுற்றியுள்ள சமூகம்’ என உண்மையை உடைப்பது ரசிக்கும்படி உள்ளது. அதுபோல், ‘போனால் பார்க்க முடியவில்லை; அதனாலென்ன வரும் போது பார்த்துக்கொள்ளுங்கள், வராமலா போகும்’ என தேர்தல் பற்றி சொல்கிறது. சந்தம், கருத்து நிறைந்த கவிதைகளின் தொகுப்பு நுால்.
– ஒளி