பேரன்பும், அறிவியலும் கலந்து உருவாக்கியுள்ள நாவல். தட்டான் பூச்சி வாயிலாக கதையை நகர்த்தி, பூச்சியின் வாழ்வியலை பேசுகிறது.
புதிய கண்டுபிடிப்புகள், மனித மனங்களில் ஏற்படுத்திய தாக்கத்தை கூறுகிறது. தனிமை குறித்த அறிவியல் ஆய்வுகளை கூறுகிறது. தனிமையை, மகிழ்ச்சியின்மையோடு தொடர்புபடுத்த வேண்டாம் என்கிறது. நேசம், தனிமையை விலக்கும் என்கிறது.
ஆய்வு முடிவுகளை, நாவல் வழியாக சொல்லியிருப்பது, சமூக அக்கறையை காட்டுகிறது. மனித மனங்களை நேசிக்க துாண்டும் நுால்.
– டி.எஸ்.ராயன்