செய்த பலன் செய்தவருக்கே திரும்ப வரும். ஒருவர் வேண்டியதை தாமே நடத்திச் செல்ல வேண்டும். வாழ்வில் நிகழ்வனவற்றுக்கு வாழ்பவரே பொறுப்பு என உணர்த்தும் நுால்.
கர்மாவைப் பற்றி விரிவான தகவல்களைத் தருகிறது. போன பிறவியில் செய்த வினைகள் சஞ்சிதம் என்றும், நிகழ்காலத்தில் செய்பவை பிராரப்தம் என்றும், செயல்களின் எதிர் விளைவு ஆகாமியம் என்றும் கூறுகிறது.
வேதத்தில் குறிப்பிட்டுள்ள ஐந்து வகை மனிதர்களைப் பற்றி விளக்கம் தருகிறது. செயல்களுக்கு ஏற்ற வினைப்பயன் உண்டு என ஆதாரங்களுடன் விளக்குகிறது. வாழ்வை நிர்ணயிக்கும் சக்தி கர்மா. உழைத்தால் தான் உயர்வு அடைய முடியும் என்பது மாறாத விதி. கர்மாவைப் பற்றியும், கர்ம வினைகளைப் பற்றியும் அறிந்து கொள்ள உதவும் நுால்.
– புலவர் ரா.நாராயணன்