இந்திய – பாகிஸ்தான் மோதல் விளைவுகளை வரலாற்றுப்பூர்வமாக விளக்கும் நுால். ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமை சீர்குலைவின் ஆரம்ப கால நிலை, பிரிவினை வாதம், தனி நாடு கோரிக்கை பற்றி எல்லாம் தகவல்களை வழங்குகிறது.
பிரிவினைக்கு பின், இரு நாடுகளிடையே ஏற்பட்ட முதல் போர், காஷ்மீர் பிரச்னை, இணைப்பு ஒப்பந்தம் மற்றும் அதன் விளைவுகளை எடுத்துச் சொல்கிறது.
தொடர்ந்து, இரண்டாவது போர் பற்றி விளக்குகிறது. அதில் காஷ்மீர் வரலாறு, இரண்டாவது காஷ்மீர் போர் மற்றும் அதன் விளைவுகள் பற்றி சொல்லப்பட்டுள்ளது. அடுத்து, வங்கதேச உருவாக்கத்துக்கான போர், சியாச்சின் பிணக்கு, கார்கில் போர் என எல்லாவித முரண்களையும் அலசி கருத்துக்களை வெளிப்படுத்தும் நுால்.
– ராம்