ஆங்கிலம் கலந்த நடையில் ஒன்பது சிறுகதைகளின் தொகுப்பு நுால். எழுத்தில் மாறுபாடுகள் காட்டப்பட்டுள்ளது.
சிரமமாக இருந்தாலும் ஆண் இன்றி பெண் வாழ்வை நடத்த முடியும். ஆனால், ஆண் அப்படி நடத்த முடியாது. அது ஏன் என்ற கேள்வியுடன் கருத்தாழம் மிக்க கதை உள்ளது. வத்தக் குழம்பு தேன் கலரில் வரணும். சுண்டைக்காயை கருக்காமல் வறுத்து கடைசியில் வெல்லம் போட்டு இறக்கினால் ருசி அபாரமாக இருக்கும் என்ற --சாப்பாட்டு வர்ணனை எச்சில் ஊற வைக்கிறது.
வெளிநாட்டு வாழ்க்கையில் லயித்த மனம் பற்றி, ‘குமட்டி அடுப்பு’ கதை பேசுகிறது. கதையை முடிக்கும் நடையழகு வித்தியாசமானது. பாட்டியின் அந்தக் கால காதல் கல்யாணம் கதை தனி ரகம். சுவாரசியமான கதைகளின் தொகுப்பு நுால்.
– சீத்தலைச் சாத்தன்